காங்கிரஸ்- திமுக இடையே உள்ள கருத்து வேறுபாடு பேசி தீர்க்கப்படும்- கே.எஸ் அழகிரி

 

காங்கிரஸ்- திமுக இடையே உள்ள கருத்து வேறுபாடு பேசி தீர்க்கப்படும்- கே.எஸ் அழகிரி

புதுச்சேரியில் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கருத்து வேறுபாடுகள் பேசி தீர்க்கப்படும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “ஆளுநர் சட்டத்திற்கு புறம்பாக மக்கள் நலத்திற்கு புறம்பாக ஒற்றை ஆட்சி நடத்தி வரும் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காந்திய வழியில் அமைச்சர் கந்தசாமி போராடி வருகின்றார். ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்து ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநரை வைத்து ஆட்டிப்படைக்கும் நிலையில் பிரதமர் மோடி உள்ளார், இது புதுவைக்கு மட்டும் ஏற்பட்ட ஆபத்து இல்லை தென்னிந்தியாவிற்கே ஏற்பட்ட ஆபத்து.

காங்கிரஸ்- திமுக இடையே உள்ள கருத்து வேறுபாடு பேசி தீர்க்கப்படும்- கே.எஸ் அழகிரி

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையில் இருப்பவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் அதை முதல்வர் நாராயணசாமி திறமையாக கையாள்வார், திமுக தலைவர் ஸ்டாலினும் இது குறித்து பேசி முடிவெடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தொகுதி பங்கீட்டில் கடந்த முறையை விட அதிகம் குறைவு என்பது விவாதம் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 இடங்கள் பெற்று 8 இடத்தில் வெற்றி பெற்றுள்ளோம். திமுக காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியில் ஒற்றுமையாக உள்ளது.

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் ஸ்டாலின் தான் முதல்வர் என்று நாங்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளோம். ஆனால் அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்” எனக் கூறினார்.