30 கோடி ரூபாய்க்கு கமலாயத்தை வாங்கிக்கொள்கிறீர்களா? எனக் கேட்ட முருகன்! எங்களிடம் பிஎம் கேர் இல்லை- கே.எஸ் அழகிரி

 

30 கோடி ரூபாய்க்கு கமலாயத்தை வாங்கிக்கொள்கிறீர்களா? எனக் கேட்ட முருகன்! எங்களிடம் பிஎம் கேர் இல்லை- கே.எஸ் அழகிரி

பெருந்தலைவர் காமராஜர் அரும்பாடுபட்டு உருவாக்கிய தந்த தமிழ்நாடு காங்கிரசுனுடைய கமிட்டிக்கு அறக்கட்டளைக்கான சொத்துக்கள் தவறான வழிகளில் பயன்படுத்த பாஜக முயற்சிப்பதை சுட்டிக்காட்டிய காரணத்தினால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழக பாஜக தலைமை அலுவலகம் இயங்கும் இடத்தை ரூ 30 கோடி மதிப்புள்ளதென்றும் அதை ரூ.3 கோடிக்கு மிரட்டி வாங்கினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலளித்த எல்.முருகன் ரூ.30 கோடி என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்தார் என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்ட படி ரூ.30 கோடிக்கு நாங்கள் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். அவர் வாங்கிக்கொள்ள தயாரா? என கேள்வி எழுப்பினார்.

30 கோடி ரூபாய்க்கு கமலாயத்தை வாங்கிக்கொள்கிறீர்களா? எனக் கேட்ட முருகன்! எங்களிடம் பிஎம் கேர் இல்லை- கே.எஸ் அழகிரி

இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் அறக்கட்டளையை, 20 ஆயிரம் கோடிக்கு பாரதிய ஜனதா தலைவர் முருகன் வாங்கிக்கொண்டால், கமலாலயத்தை 30 கோடி ரூபாய்க்கு வாங்க தயார் என பதிலடி கொடுத்தார். மேலும் எங்களிடம் பி.எம். கேர் உள்ளதா என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.