பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி… இன்று நடைபெறவிருந்த டி20 போட்டி ஒத்திவைப்பு!

 

பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி… இன்று நடைபெறவிருந்த டி20 போட்டி ஒத்திவைப்பு!

இந்திய இளம் வீரர்களைக் கொண்ட ஜூனியர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணியை மூத்த வீரர் ஷிகார் தவான் கேப்டன் பொறுப்பேற்றிருக்கிறார். இம்மாதம் 18ஆம் தேதி ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா எளிதாக வென்றது. ஆனால் இரண்டாம் போட்டியில் கடுமையாகப் போராடி த்ரில் வெற்றிபெற்றது. மூன்றாம் போட்டியில் போராட்டமின்றி இலங்கையிடம் சரணடைந்தது. எனினும் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது.

பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி… இன்று நடைபெறவிருந்த டி20 போட்டி ஒத்திவைப்பு!

கடந்த 25ஆம் தேதி டி20 போட்டி துவங்கியது. இதில் பேட்டிங், பவுலிங் என அனைத்து டிபார்ட்மென்டிலும் சிறப்பாக விளையாடி இலங்கையை இந்திய அணி துவம்சம் செய்தது. இன்று இரண்டாம் டி20 போட்டி நடைபெறவிருந்தது. அதற்காக வீரர்கள் அனைவரும் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இச்சூழலில் இன்று வீரர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் குருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி… இன்று நடைபெறவிருந்த டி20 போட்டி ஒத்திவைப்பு!

இதனால் இன்றைய நாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு நெகட்டிவ் என வந்தால் இப்போட்டி நாளை நடைபெறும். இல்லையென்றால் தொடர் ரத்தாகவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் தான் உள்ளனர். அதேபோல பார்வையாளர்களின்றியே இந்தத் தொடர் நடத்தப்பட்டு வந்தது. அதுவும் ஒரே மைதானத்திலேயே ஆறு போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி கொரோனா நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.