கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்ட்யா விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்

 

கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்ட்யா விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்

சந்தேகத்துகிடமான பொருட்களை எடுத்து சென்றதால் கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்ட்யா மும்பை விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்ட்யா விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்

கடந்த செவ்வாய்க்கிழமை ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. அதன்பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய மும்பை அணி வீரர் க்ருனால் பாண்ட்யா, தங்கத்தை எடுத்துச் சென்றதற்காக மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டார். கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்ட்யாவை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், தடுத்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் அளவுக்கு அதிகமான தங்கம் மற்றும் பல்வேறு மதிப்புமிக்க பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் சகோதர் க்ருனால் பாண்டியா என்பது குறிப்பிடதக்கது.