தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

 

தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவால் காலமானார் . அவருக்கு வயது 76.

தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர் குமரி அனந்தன். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி என பன்முகத் திறன் கொண்டவர். இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவர் , அரசியல்வாதி என புகழ்பெற்ற நிலையில் தற்போது ஆளுநராக வலம்வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.