கிருஷ்ணகிரியில் சிறப்பு உதவி ஆய்வாளர், கொரோனாவுக்கு பலி!

 

கிருஷ்ணகிரியில் சிறப்பு உதவி ஆய்வாளர், கொரோனாவுக்கு பலி!

கிருஷ்ணகிரி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (51). இவர் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி சுரேஷூக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியில் சிறப்பு உதவி ஆய்வாளர், கொரோனாவுக்கு பலி!

இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுரேஷுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பாட்டார்.

இந்த நிலையில், நேற்றிரவு அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.