ரியல்எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை – பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது!

 

ரியல்எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை – பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது!

கிருஷ்ணகிரி

தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த பெல்லூரை சேர்ந்தவர் லோகேஷ். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது நண்பர் குருபரப்பள்ளியை சேர்ந்த எதுபூஷன் ரெட்டி. இவர் மீது காவல் நிலைங்களில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், லோகேஷிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டு எதுபூஷன் ரெட்டி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணம் வழங்க மறுத்துவிட்டார்.

ரியல்எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை – பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது!

இந்த நிலையில், எதுபூஷன் ரெட்டி, பிரபல ரவுடி கஜா என்பவருடன் சேர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லோகேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த லோகேஷை வெளியே இழுத்துச்சென்று இருவரும் பணம் கேட்டு தாக்கியுள்ளனர். ஆனால், லோகேஷ் பணம் தர மறுத்துவிடவே, எதுபூஷன் ரெட்டி தான் வைத்திருநுது கைத்துப்பாக்கியால் அவரை சுட்டார். இதில், படுகாயமடைந்த லோகேஷ் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தேன்கனிகோட்டை டிஎஸ்பி சங்கீதா தலைமையில் தளி போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய கொலையாளிகள் எதுபூஷன் ரெட்டி, கஜா ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், காரில் தப்பிச்செல்ல முயன்ற இவருரைவும் நேற்று பூனப்பள்ளி சோதனைச் சாவடியில் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.