கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியனுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை

 

கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியனுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓபிஎஸ் போட்டியிடுவாரா? அல்லது சசிகலாவால் கைகாட்டப்பட்ட ஈபிஎஸ் போட்டியிடுவாரா என்பது குறித்து வரும் 7ம் தேதி அவர்களே இணைந்து அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இதனை பற்றி ஆலோசிக்க செயற்குழு கூட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. மாறாக, அக்கூட்டத்தில் ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், இன்று இரண்டாம் நாளாக துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியனுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். இதனிடையே ஓபிஎஸ் இல்லம் முன் அவரது ஆதரவாளர்கள் நாளைய முதலமைச்சர், ஜல்லிக்கட்டு நாயகன், தேனியின் சிங்கம் என முழுக்கம் எழுப்பி வருகின்றனர்.