“புதிய மாவட்டமாக உதயமாகும் கோவில்பட்டி”

 

“புதிய மாவட்டமாக உதயமாகும் கோவில்பட்டி”

சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர், எடப்பாடிக்கு அடுத்து கோவில்பட்டி தொகுதியும் கவனம் பெற்றிருக்கிறது. காரணம் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அங்கு போட்டியிடுகிறார். ஆண்டிப்பட்டி, கம்பம் உள்ளிட்ட தேனி தொகுதிகளில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் எதிர்பாரா திருப்பமாக கோவில்பட்டியை தேர்ந்தெடுத்திருக்கிறார். குறிப்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ இருமுறை வென்ற தொகுதி கோவில்பட்டி. மூன்றாவது முறையும் போட்டியிடுகிறார். திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அங்கு போட்டியிடுகிறது.

“புதிய மாவட்டமாக உதயமாகும் கோவில்பட்டி”

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவில்பட்டியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிட மூன்றாவது முறையாக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“புதிய மாவட்டமாக உதயமாகும் கோவில்பட்டி”

2011 முதல் 2016 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2016 முதல் தற்போது வரை அமைச்சராகவும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எண்ணற்ற அரசின் சாதனைத் திட்டங்களைத் தொகுதி மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளேன். மக்களும் என்னுடன் உள்ளனர். நானும் மக்களுடன்தான் இருக்கின்றேன். இது ஒன்றே எனக்கு வெற்றி வாய்ப்பை தேடித்தரும்.