பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..

 

பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..

கொரானாவால் எந்த தொழிலையும் மாஸ்க் போட்டுகொண்டு,ம் சமூக இடைவெளியுடனும் செய்யலாம் .ஆனால் பாலியல் தொழிலை அப்படி நடத்த முடியுமா ?முடியாது ,அதனால் அதை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத பாலியல் தொழிலாளர்கள் மிகவும் வறுமையான நிலையில் உலகம் முழுவதும் வாடுகின்றனர் .
ஒரே இரவில் லட்சக்கணக்கில் சம்பாதித்த பாலியல் பெண்கள் எல்லாம் இப்போது ஆயிரம் ,ஐநூறுக்கு கூட கஸ்டமர் வராமல் கஷ்டப்படுகிறர்கள் .சிலர் பணத்தை சேமித்து வைத்திருந்ததால் இந்த நேரத்தில் சமாளித்துக்கொள்கிறார்கள் .ஆனால் பலர் அன்றாட தேவைக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் .

பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..
ஜமைக்காவில் பிரெட்டி பேஸ் என்ற 28 வயது பாலியல் தொழிலாளி தன்னுடைய 13 வயது டீனேஜ் மகனுக்காக இந்த பாலியல் தொழிலை செய்து வந்தார் .மகனை நகரத்தில் மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறார் .அதனால் அவன் கேட்கும் பொருட்களை வாங்கி தருவதற்கு ஒற்றை பெற்றோராக இருக்கும் அவர், இந்த தொழிலை செய்து சமாளித்து வந்தார் .ஆனால் மார்ச் மாதம் முதல் ஜமைக்காவில் கொரானா பரவ தொடங்கியதிலிருந்து வாடிக்கையாளர் வருவதை நிறுத்தியதால் ,மகனுக்காக வேறு தொழிலை தேடி போனார் .

பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..
ஆனால் இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியில் வேறு எங்கும் வேலை வாய்ப்பு இல்லாததால் வேறு எந்த தொழிலை செய்யவும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .இதனால் அவர் மிகவும் மனம் ஒடிந்த நிலையில் கைக்கும் ,வாய்க்கும் வருமானம் போதாமல் கஷ்டப்படுகிறார் .இவரைப்போலவே இந்தியாவிலும் டெல்லி ,மும்பை ,கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் மிக மோசமான நிலையில் வறுமையில் வாடுகின்றனர் .என்று ஒழியும் இந்த கொரானா என்று அவர்கள் ஆளில்லா வாசலை பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் .