“கொடிவேரி குடிநீர் திட்டப்பணிகள் டிசம்பரில் முடியும்” – தோப்பு வெங்கடாசலம்

 

“கொடிவேரி குடிநீர் திட்டப்பணிகள் டிசம்பரில் முடியும்” – தோப்பு வெங்கடாசலம்

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவடையும் என பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வாவிகடை பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்ட பணிகளை துவக்கி வைத்து பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், இத்திட்டம் தொடங்கினால் தண்ணீர் பஞ்சம் இல்லாத தொகுதியாக பெருந்துறை திகழும் என கூறிய அவர், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பெருந்துறை ஒன்றியத்திற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தால், பெருந்துறை பகுதியின் வறட்சி நீங்கும் என்றும் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

“கொடிவேரி குடிநீர் திட்டப்பணிகள் டிசம்பரில் முடியும்” – தோப்பு வெங்கடாசலம்