“வருங்கால முதல்வர் வாழ்க” ஏடாகூடமாக கத்திய தொண்டர் : பதறிப்போன நேரு

 

“வருங்கால முதல்வர் வாழ்க” ஏடாகூடமாக கத்திய தொண்டர் : பதறிப்போன நேரு

பிராமணர்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கே.என். நேரு வாக்குறுதி அளித்துள்ளார்.

“வருங்கால முதல்வர் வாழ்க” ஏடாகூடமாக கத்திய தொண்டர் : பதறிப்போன நேரு

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக – அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என். நேரு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று லால்குடி திமுக வேட்பாளரான சௌந்தரபாண்டியனை ஆதரித்து கே.என்.நேரு பரப்புரை மேற்கொள்ள வந்தார். அப்போது பிரச்சார வாகனத்தில் ஏற முயன்ற நேரு அருகில் இருந்த ஒருவர், வருங்கால முதலமைச்சர் வாழ்க என்று கோஷமிட்டார். இதனால் பதறிப்போன நேரு அவர் யார்? உடனடியாக கூட்டத்திலிருந்து வெளியே அனுப்புங்கள் என்று கடிந்து கொண்டார்.

“வருங்கால முதல்வர் வாழ்க” ஏடாகூடமாக கத்திய தொண்டர் : பதறிப்போன நேரு

கடுப்பில் இருந்த நேருவிடம் லால்குடி திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். இருப்பினும் நேரு சமாதானம் ஆகாமல் கோபமாகவே இருந்தார் என்று திமுக தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர். முன்னதாக ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.பழனியாண்டியை ஆதரித்து பேசிய கே.என்.நேரு, ” நீங்கள் வணங்கும் பெருமாளை தான் நானும் வணங்குகிறேன். என் குலதெய்வமும் பெருமாள் தான். உங்களின் தேவையை நிறைவேற்றி தர தான் நான் இங்கு இருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இங்குள்ள பிராமணர்களின் உயர்வுக்கு நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.