கிசான் முறைகேடு – உதவி வேளாண் பெண் அதிகாரி கைது!

 

கிசான் முறைகேடு – உதவி வேளாண் பெண் அதிகாரி கைது!

கிசான் முறைகேடு தொடர்பாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.

கிசான் முறைகேடு – உதவி வேளாண் பெண் அதிகாரி கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்லம் வட்டார உதவி வேளாண் அலுவலர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த பிரியாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் . விவசாயி இல்லாத 3 ஆயிரம் பேரை கிசான் திட்டத்தில் முறைகேடாக பிரியா சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரியாவுக்கு உதவி செய்த இடைத்தரகர்கள் அணிலாடி, பிரிட்டா மேரி, ஹென்றி, கல்லக்குடி குப்பம் ராமலிங்கம் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

கிசான் முறைகேடு – உதவி வேளாண் பெண் அதிகாரி கைது!

இதனிடையே பிரதமரின் கிசான் விவசாய திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு ரூ. 6ஆயிரம் உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் விவசாயி அல்லதோர் விண்ணப்பித்து முறைகேடாக உதவி தொகையை வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.