ரூ.45 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் கொலை – கொளையாளி கைது

 

ரூ.45 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் கொலை – கொளையாளி கைது

தெலங்கானாவில் பணம் கேட்டு கடத்திச்சென்ற சிறுவனை கொன்று எரித்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர். தெலுங்கானா மாநிலம் மகபூப்நகரில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுவன் தீக்‌ஷித் கடந்த ஞாயிறன்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரால் கடத்திச்செல்லப்பட்டான்.

ரூ.45 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் கொலை – கொளையாளி கைது


அன்று இரவு தீக்‌ஷித்தின் தாய் வசந்தாவை தொடர்புகொண்ட கடத்தல்க்காரன் 45 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் தீக்‌ஷித்தை விடுவிப்பதாக கூறி ஒரு குறிப்பிட்ட பகுதியில் அன்று இரவுக்குள் பணத்தை ஒப்படைக்க கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பணம் புரட்டிய தீக்சித் பெற்றோர் கடத்தல்க்காரன் குறிப்பிட்ட இடத்திற்கு பணத்துடன் சென்று விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் பணத்தை வாங்கி செல்ல யாரும் வரவில்லை.
இந்நிலையில் மகபூப்நகர் அருகே உள்ள மலை குன்று ஒன்றில் சிறுவன் ஒருவன் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக இன்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ரூ.45 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் கொலை – கொளையாளி கைது


அதன் அடிப்படையில் அங்குசென்ற போலீசார் அந்த உடல் கடத்தப்பட்ட சிறுவன் தீக்‌ஷித் உடையது என்றும், தீக்‌ஷித்தை கடத்தி சென்றவன் அவனை கொலைசெய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதையும் உறுதிசெய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மகபூப்நகர் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீக்‌ஷித்தை கடத்தி கொலை செய்த சாகர் என்பவனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.