வீட்டில் திருட முயன்ற கேரள இளைஞர், பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு

 

வீட்டில் திருட முயன்ற கேரள இளைஞர், பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு

திருச்சி

திருச்சி அருகே வீட்டில் திருட முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியதில், கேரளாவை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் திருட முயன்ற கேரள இளைஞர், பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த அல்லூரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது வீட்டில் நேற்று காலை 2 மர்மநபர்கள் சுவர் ஏறி குதித்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டு வெங்கடேசன் சத்தம் எழுப்பியதால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து, கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தனர். அப்போது கொள்ளையரில் ஒருவன் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் திருட முயன்ற கேரள இளைஞர், பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் கத்தியை தட்டிவிட்டு, அவனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞரை மினிவேனில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட மற்றொரு கொள்ளையனை பிடித்து விசாரணை நடத்தினர்.

வீட்டில் திருட முயன்ற கேரள இளைஞர், பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு

விசாரணையில் அவர் கேரள மாநிலம் கிருஷ்ண கிருபா பகுதியை சேர்ந்த பாபுல்லேயன் மகன் அரவிந்த் (24) என்பதும், படுகாயம் அடைந்த நபர் திருவனந்தபுரத்தை சேர்ந்த தீபு(25) என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அல்லூர் கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் திருட முயன்ற இளைஞர் பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.