இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்… கேரள பெண் பரிதாப உயிரிழப்பு!

 

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்… கேரள பெண் பரிதாப உயிரிழப்பு!

பல வருடங்களாக கிழக்கு ஜெருசலேம் நகருக்காக இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அந்த நகரை இஸ்ரேல் முழுவதுமாகக் கைப்பற்ற துடிக்கிறது. இன்னொரு பக்கம் பாலஸ்தீனர்கள் ஜெருசலேம் எங்களது தலைநகர் விட்டு கொடுக்க முடியாது என்று கொடி பிடிக்கின்றனர். இதனால் இரு பிரிவினருக்கும் அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பின்னர் அமைதி காப்பதும் வாடிக்கையாகிப் போனது.

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்… கேரள பெண் பரிதாப உயிரிழப்பு!
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்… கேரள பெண் பரிதாப உயிரிழப்பு!

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தான் கடும் மோதல் வெடிக்கும். ஏனென்றால் 1967ஆம் ஆண்டு மே 9ஆம் தேதியன்று கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில், ரமலான் மாதத்தின் இறுதி நாள்களில் இஸ்லாமியர்கள் அதிகப்படியாக வசிக்கும் பகுதிகளின் வழியாக யூதர்கள் கொடி அணிவகுப்பு நடத்துவதே இதற்குக் காரணம். அதேபோல தான் இந்தாண்டும் இந்த ரமலான் மாதத்தில் கடந்த திங்கட்கிழமை உரசல் ஆரம்பித்தது. பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் காவல் துறையினருக்கும் மோதல் வெடித்தது. இரு தரப்பும் தாக்கி கொண்டதில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர்.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சொன்னது போலவே இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்வாறாக இரு தரப்பும் மாறி மாறி வான்வழி தாக்குதலை நிகழ்த்தினர். மோதல் உச்சம் பெறவே ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக 200 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவினர்.

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்… கேரள பெண் பரிதாப உயிரிழப்பு!

சில ராக்கெட்டுகள் இஸ்ரேலில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்துள்ளது. இந்த விபத்தில் தான் கேரளாவைச் சேர்ந்த செவிலி சௌமியா உள்டப 35 மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், அனைத்து தரப்பும் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

உயிரிழந்த சௌம்யாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “உயிரிழந்த சௌம்யாவின் உடலை இந்தியாவிற்குக் கொண்டு வர கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்காக இஸ்ரேலிலுள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டுள்ளது. அதன்மூலம் விரைவாகவே சௌம்யாவின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.