குரைத்ததால் நாயின் வாயில் டேப் போட்டு ஒட்டிய கொடுமை! 2 வாரங்களாக பசியில் தவித்த நாய்!!

 

குரைத்ததால் நாயின் வாயில் டேப் போட்டு ஒட்டிய கொடுமை! 2 வாரங்களாக பசியில் தவித்த நாய்!!

கேரளாவில், வாய் கட்டப்பட்ட நிலையில் இரண்டு வாரங்களாக சுற்றித்திரிந்த நாய் ஒன்று மீட்கப்பட்டது.

திருச்சூர் மாவட்டத்தில் நாய் ஒன்று வாய் கட்டப்பட்ட நிலையில் சுற்றிவருவதாக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நாயை அவர்கள் தேடிவந்தநிலையில், ஒல்லுர் என்ற இடத்தில் அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டது. வாய் முழுவதும் டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் தண்ணீர் குடிக்கக்கூட முடியாமல் அந்த நாய் தவித்து வந்தது தெரியவந்தது. சுமார் 2 வார காலம் இந்த நிலையிலேயே நாய் சுற்றிவந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குரைத்ததால் நாயின் வாயில் டேப் போட்டு ஒட்டிய கொடுமை! 2 வாரங்களாக பசியில் தவித்த நாய்!!

தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்ததால் நாயின் வாயை இப்படி கட்டியிருக்கலாம் என்று கூறும் விலங்குகள் நல அமைப்பினர், பல அடுக்குகளாக சுற்றப்பட்ட டேப்பால், நாயின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். டேப்பை அவிழ்த்தபிறகு அந்த நாய் 2 லிட்டர் தண்ணீர் குடித்ததாகவும் அந்த அளவு தாகத்துடனும், பசியுடனும் சுற்றிவந்ததாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். தற்போது அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் மறப்பதற்குள் நாய் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.