ஒரு மாதமாக உணவு கொடுக்காமல் சித்ரவதை : பசியால் இறந்த தந்தை!

 

ஒரு மாதமாக  உணவு கொடுக்காமல் சித்ரவதை : பசியால் இறந்த தந்தை!

கேரள மாநிலம் கோட்டயம் அசம்பாணி பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மிணி (78) இவர்கள் தங்கள் இளைய மகன் ரெஜி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் மகன் ரெஜி வீட்டில் உள்ள அறையில் பூட்டி உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை ஒரு மாதமாக கொடுக்காமல் கொடுமை செய்து வந்துள்ளார். அத்துடன் வீட்டுக்குள் உறவினர்கள் யாரும் வந்து பெற்றோரை பார்த்துவிடாமல் இருக்க நாயை ஒன்றை வீட்டு வாசலில் கட்டி போட்டுவிட்டு மனைவி ஜான்சியுடன் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

ஒரு மாதமாக  உணவு கொடுக்காமல் சித்ரவதை : பசியால் இறந்த தந்தை!

இந்த சூழலில் முதியவர்கள் கணக்கெடுப்புக்கு வந்த அங்கன்வாடி பணியாளர்கள் முதியவர்களை வீட்டில் பூட்டிவைத்தது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை மீட்ட போது முதியவர் பொடியன் ஏற்கனவே இறந்துள்ளதும் , அம்மிணி அம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரெஜியின் தந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிரப்பள்ளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஒரு மாதமாக  உணவு கொடுக்காமல் சித்ரவதை : பசியால் இறந்த தந்தை!

இதில் முதியவர் பொடியனின் குடலில் துளி அளவு கூட தண்ணீர் மற்றும் உணவு இல்லை என்பதும், அவர் தொண்டை வறண்டு காணப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தாய் அம்மிணி அம்மாளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் – தந்தைக்கு உணவளிக்காமல் கொடுமை செய்த மகன் ரெஜி மற்றும் அவரது மனைவி ஜான்சியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.