“ஏண்டி என்னை விட்டுட்டு எவன்கூட போகப்போறே “அமெரிக்காவில் குடும்ப தகராறில் கணவரால் குத்தி கொல்லப்பட்ட கேரளா நர்ஸ் ..

 

“ஏண்டி என்னை விட்டுட்டு எவன்கூட போகப்போறே “அமெரிக்காவில் குடும்ப தகராறில் கணவரால் குத்தி கொல்லப்பட்ட கேரளா நர்ஸ் ..

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கோரல் ஸ்பிரிங்ஸ் மருத்துவமனையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 26 வயது மெரின் ஜாய் என்ற நர்ஸ் வேலை பார்த்து வந்தார் .அவருக்கு திருமணமாகி அவரின் கணவர்34 வயது மாத்தியூ வோடு வசித்து வருகிறார் .அவருக்கும் அவரின் கணவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் வருமாம் .இதனால் அவர் தன்னுடைய கணவரிடமிருந்து பிரிந்து வாழ திட்டமிட்டிருந்தார் .

“ஏண்டி என்னை விட்டுட்டு எவன்கூட போகப்போறே “அமெரிக்காவில் குடும்ப தகராறில் கணவரால் குத்தி கொல்லப்பட்ட கேரளா நர்ஸ் ..
இந்நிலையில் செவ்வாயன்று இரவு பணியை முடித்துவிட்டு ,கோரல் ஸ்பிரிங்ஸ் மருத்துவமனையில் இருந்து அந்த நர்ஸ் மெரின் ஜாய் வெளியேறும் போது ஒரு கருப்பு நிற கார் ஒன்று அவரின் அருகே வந்து நின்றது .அந்த காரிலிருந்து அவரின் கணவர் மாத்யூ கீழே இறங்கி வந்தார் ,அவரின் கையில் ஒரு கத்தி இருந்தது .அந்த கத்தியால் அவர் அந்த நர்ஸை பலமுறை கழுத்திலும் ,வயிற்றிலும் குத்தியதில் அவர் அங்கேயே மயக்கமுற்று கீழே விழுந்தார் .பிறகு அவரின் கணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .
அங்கே காயமுற்று மயங்கிய நர்ஸை அந்த பகுதியிலிருந்த சிலர் அருகேயுள்ள ஹாஸ்ப்பிட்லுக்கு அழைத்து சென்றனர் .ஆனால் அங்கே சென்ற சில நிமிடங்களில் அந்த நர்ஸ் உயிரிழந்தார் .

“ஏண்டி என்னை விட்டுட்டு எவன்கூட போகப்போறே “அமெரிக்காவில் குடும்ப தகராறில் கணவரால் குத்தி கொல்லப்பட்ட கேரளா நர்ஸ் ..
ஆனால் அவர் இறக்கும்போது தன்னை கத்தியால் குத்தியது தன்னுடைய கணவர் மாத்யூ என்று போலீசிடம் கூறிவிட்டுத்தான் இறந்தார் .இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மாத்யுவை பிடித்து போலீஸ் காவலில் வைத்துள்ளார்கள் .
இறந்த நர்ஸை பற்றி அவரின் ஹாஸ்பிடல் டீன் கூறும்போது அவர் மிக திறமையான ஊழியரென்றார். .அவரின் நண்பர்கள் கூறும்போது மெரினுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால் அவர் கணவரை விட்டு ,இந்த வேலையை கூட விட்டு பிரிந்து வாழ இருந்தாரென்று கூறினார்கள் .