ராமக்கல் மெட்டுமலையில் இருந்து குதித்து, கேரள விடுதி மேலாளர் தற்கொலை

 

ராமக்கல் மெட்டுமலையில் இருந்து குதித்து, கேரள விடுதி மேலாளர் தற்கொலை

தேனி

தேனி மாவட்டம் ராமக்கல் மெட்டு மலையில் இருந்து குதித்து கேரளாவை சேர்ந்த விடுதி மேலாளர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜூ(54). இவர், தனியார் விடுதி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் இருந்து வந்த ராஜு நேற்று முன்தினம் தனது மனைவியிடம் குடும்ப நடத்த வருமாறு அழைத்துள்ளார். மேலும், அவ்வாறு வராவிட்டால் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ராமக்கல் மெட்டுமலையில் இருந்து குதித்து, கேரள விடுதி மேலாளர் தற்கொலை

ஆனால் மனைவி வீட்டிற்கு திரும்பாததால் மனமுடைந்த ராஜு, தேனி மாவட்டம் ராமக்கல் மெட்டு மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டர். ராஜுவின் மொபைல் அணைத்து வைக்கப் பட்டிருந்ததால் அச்சமடைந்த மனைவி இதுகுறித்து இடுக்கி மாவட்ட போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ராமக்கல் மெட்டு பகுதியில் சென்று விசாரித்தபோது ராஜு மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செயதது தெரியவந்தது. மேலும், தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் உடல் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கேரள போலீசாரும், ராஜுவின் மனைவியும் உடலை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.