கேரளா தங்கக் கடத்தல் விவகாரம்; ஸ்வப்னாவின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

 

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம்; ஸ்வப்னாவின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்க கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது.

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம்; ஸ்வப்னாவின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதை தொடர்ந்து ஸ்வப்னாவை தேடி வந்த கேரள காவல்துறையினர், பெங்களூருவில் வைத்து அவரை கைது செய்தனர். ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. அந்த காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. அதனையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து ஸ்வப்னா ஜாமீன் கேட்டு கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.