கேரள தங்கக்கடத்தல் வழக்கு: ரூ.1 கோடி, ஒரு கிலோ நகைகள் பறிமுதல்

 

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: ரூ.1 கோடி, ஒரு கிலோ நகைகள் பறிமுதல்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்க கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெங்களூருவிலிருந்த ஸ்வப்னாவை மற்றும் அவருக்கு துணையாக இருந்த சந்தீப் நாயர் உள்ளிட்டோரை என்.ஐ.ஏ காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: ரூ.1 கோடி, ஒரு கிலோ நகைகள் பறிமுதல்

இதனிடையே கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ரூ.1 கோடி பணம் மற்றும் ஒரு கிலோ நகைகளை என்.ஐ.ஏ பறிமுதல் செய்தது. ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கர்களில் இருந்து பணம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.