கேரள தங்க கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்! போலி சான்றிதல் கொடுத்து வேலை வாங்கிய ஸ்வப்னா…

 

கேரள தங்க கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்! போலி சான்றிதல் கொடுத்து வேலை வாங்கிய ஸ்வப்னா…

கேரள தங்க கடத்தல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் பெயரில் விமானத்தின் மூலம் பெங்களூருக்கு வந்த 30 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரள தங்க கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்! போலி சான்றிதல் கொடுத்து வேலை வாங்கிய ஸ்வப்னா…

இந்நிலையில் கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், போலிச்சான்று கொடுத்து கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுமான பிரிவில் அதிகாரி பணியில் சேர்ந்தது குறித்த வழக்கில் திருவனந்தபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தங்க கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைதாகி எர்ணாகுளம் காக்கநாடு சிறையில் உள்ள ஸ்வப்னாவை திருவனந்தபுரம் போலீஸார் சிறைக்கு சென்று முறைப்படி கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.