கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

 

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரளா வந்த அந்த விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் விமானம் வெடித்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர். 30க்கு மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வரும் நிலையில் விமானத்தில் கேரளாவை சேர்ந்த மூன்று பேரும், தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரும் பயணம் செய்தது தெரியவந்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும், கேரளாவை சேர்ந்த ஒருவரும் பெண்கள் ஆவர். அதுமட்டுமின்றி விபத்து நடந்த பகுதியில் குழந்தை ஒன்று தனியாக தவித்துள்ளது. அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த குழந்தையை மீட்ட மீட்புத்துறையினர் கோண்டோட்டி நகரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். யாராவது அந்த குழந்தையை பற்றி தகவல் அறிந்தால், தயவுசெய்து 9048769169 ஐ தொடர்பு கொள்ளுமாறு மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.