தங்க கடத்தல் வழக்கு: நாடகம் நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு!

 

தங்க கடத்தல் வழக்கு: நாடகம் நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு!

நாட்டில் முதல் முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள தங்க கடத்தல் வழக்கில் சொப்னாவும், அவருக்கு உதவி செய்த கும்பலும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரின் பங்கு மற்றும் கடத்தல் தொடர்புடைய வழக்குகளை விசாரித்தபோது, முதல்வரின் நேரடி தொடர்பும் தெரியவந்துள்ளது.

தங்க கடத்தல் வழக்கு: நாடகம் நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு!

தங்கக்கடத்தல் வழக்கில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக சொல்ல சொல்லி ஸ்வப்னா சுரேஷை கட்டாயப்படுத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மாநில போலீசார் வழக்கு பதிவு செய்வது இது தான் முதல் முறையாகும்