கேரளாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 177 ஆக உயர்வு

 

கேரளாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 177 ஆக உயர்வு

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கேரளாவில் வியாழக்கிழமையான இன்று மலப்புரம் 5, கண்ணூர் 4, கோட்டயம், திருச்சூர் தலா 3, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களில் தலா 2, இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு தலா ஒருவர் என 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 3 பேர் தமிழகத்தில் இருந்தும், 8 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும், குஜராத், ஆந்திரா தலா ஒருவர் என 10 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்று எட்டு பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 177 ஆக உயர்வு

இதையடுத்து கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 161ல் இருந்து 177 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்வர்கள் 690 பேர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 510 பேர் குணமடைந்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.