கேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,269 ஆக உயர்வு

 

கேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,269 ஆக உயர்வு

இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம் 6, மகாராஷ்டிரா 20 பேர் என 37 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 4 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகளால் நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. 15 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,269 ஆக உயர்வு

இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 624ல் இருந்து 670 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கேரளாவில் கொரோனாவால் 1,269 பேர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர், 590 பேர் குணமடைந்துள்ளனர்,”என தெரிவிக்கப்பட்டுள்ளது.