கேரளாவில் மேலும் 67பேருக்கு கொரோனா தொற்று!

 

கேரளாவில் மேலும் 67பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

கேரளாவில் மேலும் 67பேருக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் செவ்வாய்க்கிழமையான இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 27 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 33 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 7 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகளால் நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. 10 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 359 ல் இருந்து 415 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 963 பேர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 542 பேர் குணமடைந்துள்ளனர்.” என தெரிவித்தார்.