கேரளாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று!

 

கேரளாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று!

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கேரளாவில் திங்கட்கிழமையான இன்று காசர்கோடு 14, கண்ணூர் 10, திருவனந்தபுரம், பாலக்காடு தலா 5, கோழிக்கோடு 4, பத்தனம்திட்டா, ஆலப்புழா தலா 3, கொல்லம், கோட்டயம் தலா 2, இடுக்கி ஒருவர் என மாநிலம் முழுவதும் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 25 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். ஆறு பேருக்கு நோய் தொற்றுள்ளவர்களின் தொடர்புகளால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இன்று 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கேரளாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று!

இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 322 ல் இருந்து 359 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் 916 பேர். நோய் தொற்றிலிருந்து 532 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை ஐந்து உயிரிழந்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.