கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு! ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா!!

 

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு! ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 12லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 83 ஆயிரம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு! ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா!!

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று அதிகபட்சமாக மேலும் 1,078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 104 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 116 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 798 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65ஆக அதிகரித்து உள்ளது. இன்று 432பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,596ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் மொத்தம் 16,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சையில் இருப்போர் 9,458பேர் மட்டுமே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.