கேரளாவில் மேலும் 53 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 847 ஆக உயர்வு!!

 

கேரளாவில் மேலும் 53 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 847 ஆக உயர்வு!!

கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 29 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். ஐந்து பேருக்கு நோய் தொற்றுள்ளவர்களின் தொடர்புகளால் நோய் உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. இன்று ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கேரளாவில் மேலும் 53 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 847 ஆக உயர்வு!!

இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 275 ல் இருந்து 322 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் 847 பேர். நோய் தொற்றிலிருந்து 520 பேர் குணமடைந்துள்ளனர். நான்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” எனக்கூறினார்.