கேரள காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… இளம்பெண் பலியான சோகம்!

 

கேரள காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… இளம்பெண் பலியான சோகம்!

ஈரோடு

ஈரோட்டில் கேரள காதல் ஜோடி மதுவில் விஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவத்தில், இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு காளை மாடு சிலை அருகே நேற்று முன்தினம் மாலை காதல்ஜோடி விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் ஈரோடு தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கேரள காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… இளம்பெண் பலியான சோகம்!

அப்போது, தற்கொலைக்கு முயன்றவர்கள் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (26) மற்றும் திருச்சூரை சேர்ந்த கார்த்திகா(22) என்பது தெரிய வந்தது. காதலர்களான இவர்கள் செவ்வாய் கிழமை மாலை ரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபேடு ஏற்பட்டதால், இருவரும் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

இந்த நிலையில், நேற்று கார்த்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, கிருத்திகாவின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் கேரள காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.