கொரோனா இரண்டாம் அலை : தள்ளி போனது “காட்டேரி” வெளியீடு!

 

கொரோனா இரண்டாம் அலை : தள்ளி போனது “காட்டேரி” வெளியீடு!

காட்டேரி திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை : தள்ளி போனது “காட்டேரி” வெளியீடு!

இதுகுறித்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ” கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை : தள்ளி போனது “காட்டேரி” வெளியீடு!

இப்போது நிலவும் குழப்பமான மற்றும் நிலை இல்லாத தன்மையை கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் ,எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25ஆம் தேதி வெளிவர இருக்கும் “காட்டேரி” திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த கொரோனா தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை : தள்ளி போனது “காட்டேரி” வெளியீடு!

இயக்குநர் டிகே இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உருவான படம் ‘காட்டேரி’. இதில் நடிகர்கள் வைபவ், வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவலால் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.