கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி இடமாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி

 

கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி இடமாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில், காவலர்களின் பெயர்களுடனேயே பண கவர்கள் கொடுக்கப்பட்டது தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் உறுதியானது.

கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி இடமாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி

இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் புகார் எழுந்ததை உன்னிப்பாக கவனித்துவந்த தேர்தல் ஆணையம், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் வடநேரே காவல் கண்காணிப்பாளராக சசாங் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.