கரூர் அருகே குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

 

கரூர் அருகே குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

கரூர்

கரூர் அருகே குளத்தில் குளித்த அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த எட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் மூர்த்தி(21). திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது சித்தப்பா மகன் கோபி(21). பொங்கல் பண்டிகையை ஒட்டி இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை தோகமலை அடுத்த சின்னரெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள ஆவிக்குளத்திற்கு குளிக்க செல்வதாக கூறிவிட்டு இருவரும் சென்றுள்ளனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்திக்குற்கு சென்று பார்த்தனர்.

கரூர் அருகே குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

அப்போது இருவரது உடைகளும் குளத்தின் கரையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இருந்த இருவரது சடலங்களையும் மீட்டனர். இதனை அடுத்து தோகமலை போலீசார் உடல்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து முனியாண்டி புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.