`கந்தசஷ்டி குறித்து இழிவு!’- கறுப்பர் கூட்டம் சேனலின் மற்றொரு நிர்வாகிக்கு குண்டாஸ்

 

`கந்தசஷ்டி குறித்து இழிவு!’- கறுப்பர் கூட்டம் சேனலின் மற்றொரு நிர்வாகிக்கு குண்டாஸ்

கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், மற்றொரு நபர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வழியாக, கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக, செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், சுரேந்திரன் மீது ஏற்கெனவே ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரையும் ஜுலை 30 வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே கறுப்பர் கூட்டத்தின் வீடியோக்கள் அனைத்தும் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது சுரேந்திரன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல முகமது நபி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், கருப்பர் கூட்டம் சேனலின் மற்றொரு நிர்வாகியான செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.