“வெளியே வந்தால் சசிகலாவுக்கு அரணாக இருப்போம்” – கருணாஸ் எம்.எல்.ஏ

 

“வெளியே வந்தால் சசிகலாவுக்கு அரணாக இருப்போம்” –  கருணாஸ் எம்.எல்.ஏ

சிறையில் இருந்து வெளியே வந்தால் சசிகலாவுக்கு அரணாக இருப்போம் என எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களமே பரபரப்பாக இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். அதிமுகவில் நிலவிய பெருங்குழப்பம் நீங்கி, தற்போது சமாதான சூழல் நீடிக்கிறது. இருப்பினும் சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் கிடையாது என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

“வெளியே வந்தால் சசிகலாவுக்கு அரணாக இருப்போம்” –  கருணாஸ் எம்.எல்.ஏ

இதனிடையே சசிகலா ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட உள்ளதாக கர்நாடக சிறைத்துறை தெரிவித்த நிலையில், அதற்கு முன்னதாகவே அவரை வெளியில் எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் டிடிவி தினகரன். இதனால் தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னதாகவே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்பது தெளிவாக தெரிகிறது.

“வெளியே வந்தால் சசிகலாவுக்கு அரணாக இருப்போம்” –  கருணாஸ் எம்.எல்.ஏ

இந்த நிலையில், சசிகலா வெளியே வந்தால் அவருக்கு அரணாக இருப்போம் என கருணாஸ் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதும், முக்குலத்தோர் அமைப்பை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என கருணாஸ் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.