“சசிகலாவின் வருகையால் பதட்டம்” – கருணாஸ்

 

“சசிகலாவின் வருகையால் பதட்டம்” – கருணாஸ்

சசிகலாவின் வருகை தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், பெங்களூரிலேயே தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். நாளை சுபமுகூர்த்த தினத்தில் அவர் தமிழகம் வருகிறார். அவருக்கு அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் சசிகலாவின் வருகை அதிமுகவினர் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“சசிகலாவின் வருகையால் பதட்டம்” – கருணாஸ்

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கருணாஸ் வாலாஜாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சசிகலா வருகை பதட்டமாக இருக்கிறது. அதனை அனைவரும் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஏன் இந்த பதட்டம் என்பது தெரியவில்லை. சின்னம்மாவின் வருகை என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சசிகலா உடல்நலம் குணமடைந்து வரவேண்டுமென்பதே என்னுடைய பிரார்த்தனை” எனக் கூறினார்.