“பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கப்பட்டால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமூகமும் போராட்டத்தில் குதிக்கும்”

 

“பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கப்பட்டால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமூகமும் போராட்டத்தில் குதிக்கும்”

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், “அரசியல் சுயநலத்திற்காக யாராவது ஒரு சமுதாயத்திற்கு தனியாக இந்த அரசு ஏதாவது இட ஒதுக்கீடு அறிவிக்குமேயானால் தமிழகத்தில் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமும் நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயமும் இணைந்து தமிழகம் காணாத ஒரு போராட்டத்தை காண நேரிடும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எம்ஜிஆர் வழியில் எண்ணற்ற ஏழை, எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்து எங்களை போன்ற அடையாளம் தெரியாதவர்களுக்கெல்லாம் பல உயர்ந்த பதவிகள் வழங்கி மக்களால் நான் மக்களுக்காகவே நான் என கடைசி வரை மக்கள் பணியாற்றிய தியாகத் தலைவிக்கு இப்பேர்ப்பட்ட ஒரு விழா என்பது ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் வரவேற்கக் கூடிய ஒரு செய்தி.

“பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கப்பட்டால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமூகமும் போராட்டத்தில் குதிக்கும்”

மக்கள் பிரச்சினையை தீர்ப்பேன் என கூறுவது எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் முக்குலத்தோர் புலிப்படை வரவேற்கும். சசிகலா தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார் அவர் வீடு திரும்பியதும் அவரை சந்திக்க நேரம் கேட்போம், எங்களுக்கு நேரம் ஒதுக்கும் பட்சத்தில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து உடல் குறித்து முக்குலத்தோர் புலிப்படை சார்பில் விசாரிப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை அதிமுகவுடன் கூட்டணியா? இல்லை அமமுகவுடன் கூட்டணியா? என இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை. தற்போது வரை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால் அவரை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

தற்போது கூட்டணி நடைபெற்றுக் கொண்டுள்ளது. சில கட்சிகள் கூட்டணியை துவக்கி உள்ளனர். சில கட்சிகள் பேரங்களை ஆரம்பித்துள்ளனர். மக்கள் அதை பார்த்துக்கொண்டு தான் உள்ளார்கள். அது சொல்லக்கூடிய காரணம் வேறாக இருந்தாலும் இயக்கங்களில் நடக்கக்கூடிய பேரங்களை அறிவு சார்ந்த மக்கள் உணர்ந்து கொண்டுதான் உள்ளார்கள். அது எல்லாம் முடிந்த பிறகு வெளிப்படையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி கட்சிகளையும் எங்களைப் போன்ற இயக்கங்களையும் அழைத்து பேசினால் தான் கூட்டணி முடிவாகும்.

அரசியல் எனக்கு தொழில் கிடையாது, அரசியலை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கீழ்தரமான சிந்தனையும் எனக்கு கிடையாது. ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுமேயானால் அதிகமாக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” எனக் கூறினார்.