நாளை கருணாநிதி 2-ஆம் ஆண்டு நினைவு தினம்! திருக்குவளையில் சிலை திறப்பு!

 

நாளை கருணாநிதி 2-ஆம் ஆண்டு நினைவு தினம்! திருக்குவளையில் சிலை திறப்பு!

றைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் நாளை 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்தில் அவரது சிலை திறக்கப்படுகிறது. காணொளி காட்சி மூலமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சிலையை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்தில் அன்னை அஞ்சுகம், தந்தை முத்துவேலர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் ஆகியோரது சிலைகள் உள்ளன. அங்கே கருணாநிதியின் உருவச்சிலையை நிறுவ ஏற்பாடு நடந்து வருகின்றது. நாளை காலை சிலை திறக்கப்படுகிறது.

இதைமுன்னிட்டு, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மா.செ.க்களுடன் காணொளி காட்சி மூலம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ஸ்டாலின், ‘’ இந்த நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாம் செய்வோம். இது கொரோனா காலம் என்பதால் கொரோனா களப்பணியாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக உங்கள் பணிகள் இருக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.