ரஜினி ரசிகர்களை நம்பவில்லை; பாஜகவை நம்புகிறார்: கார்த்தி சிதம்பரம்

 

ரஜினி ரசிகர்களை நம்பவில்லை; பாஜகவை நம்புகிறார்: கார்த்தி சிதம்பரம்

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்துவரும் சசிகலா சிறையிலிருந்து வெளிவந்த பின் அதிமுக அவரது கைக்கு சென்றுவிடும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ரஜினி ரசிகர்களை நம்பவில்லை; பாஜகவை நம்புகிறார்: கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “ரஜினியின் செயல்பாடுகள் அனைத்திலும் பாஜகவே உள்ளது. ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நம்பவில்லை பாஜகவினரையே நம்புகிறார். முழுக்க முழுக்க பாஜகவின் சாயலாக ரஜினி செயல்படுகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு மட்டும் தான் போட்டி மற்றவர்கள் யாரையும் அரசியல் களத்தில் சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

சசிகலா வெளியே வந்துவிட்டால் அதிமுகவின் தலைமை சசிகலாவிடம் சென்றுவிடும். அவர் தேர்தலில் நிற்க முடியாவிட்டால் பொறுப்புகள் அனைத்தும் டிடிவி.தினகரன் வசம் சென்றுவிடும்” எனக் கூறினார்.