உ.பி கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டார் என்றும் கூறுவர்: கார்த்தி சிதம்பரம்

 

உ.பி கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டார் என்றும் கூறுவர்: கார்த்தி சிதம்பரம்

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது முதுகெலும்பு மற்றும் நாக்கு சிதைக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அங்கு இன்று காலை மீண்டும் ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் உயிரிழந்தார். ஆனால் அம்மாநில போலீசாரோ அப்பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனையை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளனர்.

உ.பி கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டார் என்றும் கூறுவர்: கார்த்தி சிதம்பரம்

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.பி. கார்த்தி சிதம்பரம், “உத்தரபிரதேசத்தில் விசித்தரமான விஷயங்கள் நடக்கலாம். 28 ஆண்டுகள் கழித்து ஹத்ராஸில் வன்கொடுமை சம்பவம் நடக்கவில்லை; அந்த பெண், தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டார் என்றும் கூறுவர்” என விமர்சித்துள்ளார்.