கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்- கார்த்தி சிதம்பரம்

 

கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்- கார்த்தி சிதம்பரம்

கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்தான் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்- கார்த்தி சிதம்பரம்

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், “கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்தான், அங்கு சொத்து வாங்கியது முதல் கொலை, கொள்ளை வரை அனைத்தும் மர்மம். வழக்கு தொடர்பான விசாரணையை அதிமுக ஏன் எதிர்கிறது என புரியவில்லை. அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, தற்போதைய அரசு சிறப்பாக விசாரணை செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் கேஸ் விலை மோடி இருக்கும் வரை குறையாது. மானியங்கள் வழங்காமல் வெற்று அறிக்கைதான் நிதியமைச்சர் வெளியிடுகிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நிதி நிலைமை உயராமல் தொடர்ந்து சரிந்து வருகிறது. பெட்ரோல் ,டீசல் விலை மாநில அரசு வரி தவிர செஸ் (கலால்) வரி மூலம் நேரடியாக மக்களிடம் வரி விதிக்கிறது. ஜிஎஸ்டி வரி என்று பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாடுகளில் ஜிஎஸ்டி, வாட் என்ற வரிகள் செயலில் இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் குழப்ப நிலையில் உள்ளது. மானியங்கள் வழங்காமல் பிரதமர் மோடி ஆகஸ்ட் 15ம் தேதி பல ஆயிரம் கோடி வெற்று திட்டங்களை அறிவிக்கிறார்.

அதே போல 20 ஆயிரம் , 30 ஆயிரம் கோடி எனவெற்று அறிக்கைதான் நிதியமைச்சர் வெளியிடுகிறார். 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடரும். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.