அதிமுக விட்டாலும், பாஜகவினர் அதிமுகவை விடமாட்டார்கள்- கார்த்தி சிதம்பரம்

 

அதிமுக விட்டாலும், பாஜகவினர் அதிமுகவை விடமாட்டார்கள்- கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலையை தொடங்கியுள்ளன. காங்கிரஸ் திமுகவுடன், பாஜக அதிமுகவுடனுமே கூட்டணி அமைக்கும் என்றாலும் அதிமுக கூட்டணியில் பிரச்னை நிலவுவதாக கூறப்பட்டது. குறிப்பாக ஹெச் ராஜாவுக்கும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஜெய்குமாருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அண்மையில், அமைச்சர்கள் அத்துமீறி பேசினால் அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்னை வரும் என்றெல்லாம் ஹெச் ராஜா கூறியிருந்தார். மேலும் பாஜகவின் வேல் யாத்திரைக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் கூட்டணியில் விரிசல் இருப்பதாக பேசப்பட்டது.

அதிமுக விட்டாலும், பாஜகவினர் அதிமுகவை விடமாட்டார்கள்- கார்த்தி சிதம்பரம்

இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கார்த்தி சிதம்பரம், “அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று நினைத்தாலும் பாஜகவினர் அதிமுகவை விட்டு போகப் போவதில்லை. தமிழகத்தில் உள்ள பாஜகவிற்கும், முருகனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பாஜக தலைவர் முருகனுக்கு நிஜமான கடவுள் முருகனை பற்றிய சுலோகம் தெரியுமா? வேல் யாத்திரை முழுக்க முழுக்க அரசியலுக்காக எடுக்கப்படுகின்ற ஒரு ஊர்வலம்.

வேல் யாத்திரையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதை பாதுகாக்கும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. கமல்ஹாசன் மூன்றாம் அணியையும் வைக்கலாம் மூன்றாம் பிறையையும் அமைக்கலாம். அது அவரது உரிமை” எனக் கூறினார்.