“இதற்கான விளக்கத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் நிச்சயம் சொல்ல வேண்டும்”

 

“இதற்கான விளக்கத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் நிச்சயம் சொல்ல வேண்டும்”

மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ராஜூவ் காந்தியின் 77-வது பிறந்தநாள் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

“இதற்கான விளக்கத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் நிச்சயம் சொல்ல வேண்டும்”

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “தமிழ்நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோது திமுக ஆட்சிக்கு வந்தது. இருப்பினும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியான ரேஷன் கார்டுக்கு 4,000 ரூபாயை அனைவருக்கும் வழங்கியுள்ளார். பெட்ரோல் விலையில் 3 ரூபாயை குறைத்துள்ளார். வெள்ளை அறிக்கையின் மூலம் தமிழகத்தின் நிதி நிலையை எடுத்துக்கூறியுள்ளார். தற்போது வெளியிடப்பட்ட பட்ஜெட் முழு பட்ஜெட் அல்ல. அரையாண்டு பட்ஜெட்தான். இந்த பட்ஜெட்டின் மூலம் எந்த திசையை நோக்கி அரசு செல்கிறது என்பதை தெளிவாக கூறியுள்ளார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை முழுமனதாக வரவேற்கிறேன். யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் செய்யலாம். இந்த திட்டம் நவீன தமிழகத்துக்கும், நவீன இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும். இத்திட்டத்தில் ஏற்கெனவே பணியில் இருக்கும் யாரையும் பணியில் இருந்து நீக்கவில்லை.
அதிமுக வெள்ளை அறிக்கையை குறைகூறுகிறது. வெள்ளை அறிக்கையின் புள்ளி விவரங்கள் தவறு என்று அதிமுக முன்னாள் நிதி அமைச்சர் நினைத்தால், அவர் புள்ளி விவரங்களை வெளியிட்டு, இன்று இருக்கும் நிதி அமைச்சருடன் நேரடி விவாதம் நடத்தலாம். காப்பீட்டுக் கழகங்களை தனியார் மயமாக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனை காங்கிரஸ் லோக் சபாவில் எதிர்த்த நிலையில் அறுதி பெரும்பான்மையை பயன்படுத்தி அந்த சட்ட மசோதவை நிறைவேற்றியுள்ளனர். ராஜ்யசபாவில் பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப கேட்டுக்கொண்டனர்.

“இதற்கான விளக்கத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் நிச்சயம் சொல்ல வேண்டும்”

பாஜகவை வாடிக்கையாக ஆதரிக்கும் பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் ஆகிய கட்சிகள் கூட இதனை எதிர்த்தன. ஆனால் அதிமுக அரசு இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து, காப்பீட்டுக் கழகங்களை தனியார் மயமாக்க ஆதரவு தெரிவித்துள்ளது. அதனைப் பற்றி அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. எந்த காரணத்துக்காக அந்த மசோதவை ஆதரித்து அதிமுக வாக்களித்தது என்பதை அவர்கள் விளக்க வேண்டும்” என தெரிவித்தார்.