கர்நாடகாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!

 

கர்நாடகாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!

கொரானா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. 4 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்னர் மக்கள் கூடும் பொது இடங்களை திறப்பது தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியது.

கர்நாடகாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி அன்று 4 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 1 முதல் 3 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூலை 15 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.