சமூக விலகல் விதிமுறைகளை மீறும் பா.ஜ.க. தலைவர்கள்…. இந்த முறை சிக்கியது கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்..

 

சமூக விலகல் விதிமுறைகளை மீறும் பா.ஜ.க. தலைவர்கள்…. இந்த முறை சிக்கியது கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்..

ஊருக்குதான் உபதேசம் தனக்கில்லை என பழமொழி சொல்வார்கள். இந்த பழமொழி பா.ஜ.க.வில் உள்ள பல தலைவர்களுக்கு கட்டாயம் பொருந்தும். கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போது லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் வீட்டை வெளியே செல்லும் மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு அறிவுறுத்தியுள்ளது.

சமூக விலகல் விதிமுறைகளை மீறும் பா.ஜ.க. தலைவர்கள்…. இந்த முறை சிக்கியது கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்..

அந்த அறிவுரைகள் எல்லாம் பொதுமக்களுக்குதான் நமக்கில்லை என்பது போல் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களே லாக்டவுன் மற்றும் சமூக விலகல் விதிமுறைகளை மீறி வருகின்றனர். இது தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில நேற்று கர்நாடகாவில் அம்மாநில சுகாதார துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு ஒரு ஊர்வலத்தில் பங்கேற்றதோடு சமூக விலகல் விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூக விலகல் விதிமுறைகளை மீறும் பா.ஜ.க. தலைவர்கள்…. இந்த முறை சிக்கியது கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்..

அந்த வீடியோவில், நாடே கொரோனா வைரஸ் நெருக்கடியால் சிக்கி தவிக்கும் நேரத்தில், சித்ரதுர்காவில் நடைபெற்ற ஊர்வலத்தில் அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பங்கேற்றதும், அவரை சுற்றி ஏராளமான தொண்டர்கள் நிற்பதும் அதுவேளையில் அவருக்கு பெரிய மாலை வழங்கப்படுவதும் அதில் தெளிவாக தெரிகிறது. ஒரு மாநில அமைச்சரே சமூக விலகல் விதிமுறைகள் மீறலில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி கர்நாடகாவில் மொத்தம் 3,408 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.