கர்நாடக பா.ஜ.க. முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கொரோனா… நேற்று மட்டும் 5 தலைவர்களுக்கு கொரோனா உறுதி

 

கர்நாடக பா.ஜ.க. முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கொரோனா… நேற்று மட்டும் 5 தலைவர்களுக்கு கொரோனா உறுதி

கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை பி.எஸ். எடியூரப்பா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.எஸ்.எடியூரப்பா டிவிட்டரில்,

கர்நாடக பா.ஜ.க. முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கொரோனா… நேற்று மட்டும் 5 தலைவர்களுக்கு கொரோனா உறுதி

எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. அதேவேளை நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அண்மையில் என்னை கவனித்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என பதிவு செய்து இருந்தார்.

கர்நாடக பா.ஜ.க. முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கொரோனா… நேற்று மட்டும் 5 தலைவர்களுக்கு கொரோனா உறுதி

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா விரைவில் குணமடைய, மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று மட்டும் நாட்டின் முக்கிய தலைவர்களில் எடியூரப்பா உள்பட மொத்தம் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவர் ஸ்வந்திரரா தேவ் சிங் மற்றும் உத்தர பிரதேச அமைச்சர் டாக்டர் மஹிந்திர சிங் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதியானது.