நாளை முதல் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு.. கர்நாடக அரசு அறிவிப்பு

 

நாளை முதல் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு.. கர்நாடக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில், நாளை முதல் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை உருவாகி உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் கர்நாடக உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் தொற்றுநோய் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு, பொதுக்கூட்டங்களுக்கு தடை போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நாளை முதல் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு.. கர்நாடக அரசு அறிவிப்பு
பி.எஸ். எடியூரப்பா

தற்போது கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரு, மைசூரு, கலாபுராகி, பிதர், தும்குரு, உடுப்பி, மங்களூரு மற்றும் மணிப்பால் ஆகிய 8 நகரங்களில் நாளை முதல் இரவு ஊரடங்கை அமல்படுத்த உள்ளது.

நாளை முதல் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு.. கர்நாடக அரசு அறிவிப்பு
நீச்சல் குளம்

இந்த 8 நகரங்களிலும் நாளை முதல் 20ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கொரோன ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நீச்சல் குளம், ஜிம்கள் பயன்படுத்த தடை, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பார்ட்டி ஹால்களை பயன்படுத்தக் கூடாது. எந்த நோக்கத்துக்காகவும், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை மற்றும் பொது விழாக்கள் நடத்தவும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.