சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னையில் உள்ளே தனியார் மருத்துவமனையில் அனுமதி!

 

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னையில் உள்ளே தனியார் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்து கொண்டிருப்பினும், பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக அரசியல் பிரமுகர்களுக்கு அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸின் பாதுகாவலருக்கு நேற்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பாதுகாவலருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் கருணாஸ் திண்டுக்கல்லில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். பாதுகாவலருடன் இருந்ததால் கருணாஸுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னையில் உள்ளே தனியார் மருத்துவமனையில் அனுமதி!

இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். மேலும், அவர் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.